ஞாயிறு, 18 நவம்பர், 2007

சும்மா சும்மா !!!

ரகு: என்னக்கா ஒரு மாதிரி இருக்கிற?
தமிழ்: இல்லடா எதாவது செய்து புகழ் சேக்கனும். ஆனா என்ன செய்றதுன்னு தான் ஒன்னும் புரியலடா.
ரகு: அட இதுக்கா இப்படி மூஞ்ச பன்னி மாதிரி வச்சிருக்க. உன்னுடைய கவலையை போக்க ஒரு அருமையான யோசனை வைச்சிருக்கேன், சொல்லட்டுமா?
தமிழ்: அதுக்குன்னு என்னை போய் பொதுசேவை செய்ய வைச்சுடாத? எதாவது குறுக்கு வழியிருந்தா சொல்லுடா?
ரகு: அட அப்படியா? நீ என்னமோ உண்மையா எதோ செய்ய ஆசைபடறியோன்னு நினைச்சுட்டேன்
தமிழ்: இப்படில்லாம் சொன்ன, பளார்ன்னு ஒரு அரை விட்டுடுவேன்.
ரகு: ஐயோ அம்மாடி உன் கிட்ட அடி வாங்க முடியாது. உனக்கு ரிக்ஷா வண்டிகார சண்டையெல்லாம் வேற தெறியும்.
தமிழ்: டாய் நாயே என்ன திமிரா? சரி அது போகட்டும், எதோ யோசனைன்னு சொன்னியே, என்னடா?
ரகு: அப்படிவா வழிக்கு. ரொம்ப சிம்பிலா ஒரு "வெப் சைட்" ஒன்னு துவங்கு. அதில் இதுவரை படித்த எல்லவற்றையும் பற்றியும் எழுது.
தமிழ்: ஏன்டா ரகு உனக்கே நல்லாத்தெறியும், எனக்கு படிக்கறதுன்னாலே பாவக்காயை கடிக்கறது மாதிரி. அப்படியிருக்க நான் என்னத்தை பற்றி எழுதுவது.
ரகு: ரொம்ப நல்லதாப் போச்சி. அப்ப நீ "புலோக்" ஒன்று ஆரம்பித்து உனக்கு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை எதாவது ஒரு சூடான விஷயத்தைப் பற்றிப் பேசு, எழுது.
தமிழ்: என்னடா இன்னும் குழப்புறியே. சூடான விஷயம் என்றால் என்னடா?
ரகு: அட என்னக்கா எல்லாத்தையும் உனக்கு நானே சொல்லனுமா? சரி பெரியாரை பற்றி எழுது. இல்லை சாய்பாபாவை பற்றி எழுது. அதுவும் வேண்டாம் என்றால் கிருபாநந்த வாரியாரைப் பற்றி எழுது.
தமிழ்: கிருபாநந்த வாரியாரைப் பற்றி எழுதுவதற்கு அவரைப் பற்றி எதாவது தெறிந்திருக்க வேண்டுமே. சாய்பாபாவை பற்றியும் என்ன எழுதுவது என்று புரியவில்லை. பெரியாரைப் பற்றி எனக்கு சுத்தமா ஒரு மண்ணும் தெறியாது. அப்படியிருக்க நான் எதைப்பற்றி எழுதுவது.
ரகு: இது எனக்கு தெறிந்த விஷ்யம் தான். ஒகே ஒரு ஐடியா சொல்றேன் அது படி செய்வாயா? அதாவது பெரியாரைப் பற்றி நிறைய இணையத் தளங்கள் உள்ளது. அதில் உள்ள விஷயங்களை காப்பி & பேஸ்ட் செய்து விடு. அது போதும். எப்படி என்னுடைய ஐடியா?
தமிழ்: ரொம்ப நல்லாயிருக்கு தான். ஆனால் திடீர் என்று பின்னூட்டத்தில் வந்து பெரியாரைப் பற்றி குறுக்கு கேள்வி கேட்டால் என்ன செய்வது என்றுதான் புரியவில்லை!!
ரகு: அதுக்கு, இங்கு எப்போதும் பஜேரி மாதிரி கத்துவில்ல அதே போல் கண்ட சகட்டு மேனிக்கு திட்டு, அவ்வளவுதான்.
ரகு: ஆனால் ஒன்னு. அதுக்கும் பின்னூட்டங்கள் அடங்கவில்லை என்றால் என்ன செய்வன்னு தான் தெறியவில்லை?
தமிழ்: அதுக்கு கவலைப்படாதே. அதுக்கெல்லாம் ஒரு உமி மாதிரி. சும்மா ஊதிபுடுவேன்.
ரகு: அட அப்படியா? அது எப்படி?
தமிழ்: இருக்கவே இருக்கு நம்ம வண்டிக்கார பாஷை அதை எடுத்து விட வேண்டியதுதான்.
ரகு: என்னது வண்டிக்கார பாஷையா? அதை நீ எப்படி சொல்லுவ ? உன்னை எல்லோரும் தவறாக நினைத்துவிட மாட்டார்களா?
தமிழ்: அதுக்குத்தான் அனானிமஸ் பின்னூட்டுக்கு இடம் கொடுத்திடனும்.
ரகு: அப்படி பார்த்தால் எந்த அனானிக்கு வண்டிக்கார பாஷை தெறியும்? அப்படியே தெறிஞ்சாலும் அவன் எப்படி வந்து உனக்கா பின்னூட்டு போடுவான்?
தமிழ்: அட மக்கு அரக்கியும் நான் தான் அனானியும் நானேதான்.
ரகு: அடிப்பாவி நீ இவ்வளவு பெரிய அளா?
தமிழ்: அட இதுக்கே இப்படி அசந்துட்டியே. என்னுடைய "ப்லோக்"குக்கு விளம்பரம் செய்யபோற விதத்தை நான் சொன்னால், நீ தூக்கே போட்டுக்குவே போலிருக்கே?
ரகு: அட ராமா, என்ன செய்யப்போற சொல்லு.
தமிழ்: எனக்கு போன்ல மிரட்டல் விடுராங்க அப்படின்னு போய் எல்லோர்கிட்டேயும் அழப்போறேன்
ரகு: யார் மிரட்டல் விடுராங்க அப்படின்னு கேட்டா என்ன சொல்லுவே ?
தமிழ்: இயக்கமுன்னு சொல்லுவேன்
ரகு: இயக்கம் என்றால் எந்த இயக்கம்?
தமிழ்: அட இயக்கம் என்று மட்டும் தான் சொல்லவேண்டும்.அதுக்கு மேல் ஒன்றும் சொல்லக்கூடாது. என்ன புரியுதா?
ரகு: இதுக்கெல்லாம் எவனும் தலையாட்ட மாட்டான். சும்மா போய் வேலையப்பாரு.
தமிழ்: இன்னும் கேளு அடுத்த ஐடியாவ சொல்றேன். ஆனால் தம்பிகிட்ட எப்படி சொல்றதுன்னு தான் தெறியல. சரி இப்ப ரொம்ப நாழி ஆயிட்டது மிச்சத்தை நாளைக்கு பேசலாமா?
ரகு: அம்மா தாயே என்ன ஆள விடு. நாளைக்கு போய் நான் கடைய திறக்கனும். மெட்ரோ வேர "ஸ்டைர்க்" செய்றாங்க. இதோடு இந்த பேச்சையே என் கிட்ட பேசாதே.நான் வர்ரேன்.
தமிழ்: சரி இதுக்கு மேலயும் இவன்கிட்ட சொல்லக்கூடாது. நாளைக்கு நம்ம தோழர் கிட்ட பேசுவோம். இதுக்கெல்லாம் அவர்தான் சரியா ஆளு.

2 கருத்துகள்:

kiddy ppl சொன்னது…

தமிழ் : சங்கரி! உன் பன்னித்தல அண்ணாவுக்கு இன்னையில இருந்து சனி புடிச்சிக்குச்சி.

சங்கரி : ஏன் அப்படி சொல்றீங்க?

தமிழ் : நேரில் பேச துப்பு கெட்ட பொறுக்கி, அக்கி குஞ்சுக்குள் ஒளிந்து கொண்டு வித்தை காட்டிக் கொண்டிருப்பதை போலிசில் சொல்லியாச்சு. பன்னித்தலையின் வலைப்பூ போலீஸ் கண்காணிப்பில் இருக்கிறது. MOISSY CRAMAYEL என்று வலைப்பூவில் தெரியும் இடம் என்ன தெரியுமாக்கும் செனாருக்கு போலீஸ் இருக்கும் இடம். சொல்லி வை. புள்ளையும் குட்டியுமா இருக்கான்னு பாவம் பாக்கற வேலையெல்லாம் நம்ப கிட்ட நடக்காது.

அனானி அக்னிக்குஞ்சு சொன்னது…

அய்யோ ரொம்ப பயமா இருக்குதே! தொடை இரெண்டும் நடுங்குதே இப்ப நான் என்ன செய்யறதுன்னு புரியவில்லையே. அய்யோ என்ன யாராவது காப்பாத்துங்களேன்...... அனானி அக்னிகுஞ்சு இணையதளம் பதிவு செய்யப்பட்ட இணையதளமா வேற ஆகப்போவுதே, இப்ப போய் இப்படி ஆகிப்போச்சே, நான் என்ன செய்வேன், கடவுளே, கிருஷ்ணா ராமான்னு இருந்திருக்கலாமே..... ஹா ஹா ஹா...சும்மா சும்மா.